பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் பிரபலம் - யார் தெரியுமா?

கமல்ஹாசன் பிக்பாஸ்5 biggboss5tamil nadiachang
By Petchi Avudaiappan Oct 17, 2021 12:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிக்பாஸ் சீசன் 5ல் இருந்து முதல் போட்டியாளராக நாடியா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து கடந்த வாரம் வெளியேறினார்.

இதனிடையே இதில் பங்கேற்றுள்ள மலேசியாவை சேர்ந்த மாடல் மற்றும் டப்ஸ்மாஷ் பிரபலம் நாடியா சேங் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த வாரம் இமான் அண்ணாச்சி கதைக்கு டிஸ்லைக் கொடுத்த நிலையில் அதற்கு காரணம் கேட்டபோது, காரணம் எல்லாம் சொல்ல முடியாது என திமிராக பதில் கூறினார். அதனால் அவரை அப்போது இருந்தே நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் பிரபலம் - யார் தெரியுமா? | First Elimination From Bigg Boss 5 Tamil

மேலும் சில தினங்களுக்கு முன்பு நாடியா பிக் பாஸ் வீட்டில் அவரது கதையை சொன்னார். தான் 14 வயதில் இருந்தே வேலை தான் செய்துவந்தேன், அம்மா அதிகம் ஸ்ட்ரிக்ட், போலீசிடம் அடி வாங்க வைத்தார் என நாடியா குற்றம்சாட்டி இருந்தார். அதன் பின் கணவர் தான் வந்து என்னை அம்மாவிடம் இருந்து காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் எனவும் நாடியா கூறி இருந்தார், அவர் சொன்ன கதை பொய்யானது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.