இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 4 பேர் காயம்..!
இலங்கையின் தென்மேற்கில் உள்ள ரத்காமா கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அரசுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்ட துவங்கினர்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்சே வீடு மற்றும் எம்.பிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இதனிடையே பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் கண்டதும் கூட அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரதேச சபை தலைவர் வீட்டை முற்றுகையிட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
காலே மாவட்டத்தில் உள்ள ரத்காமா கிராமத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
You May Like This