மின்கசிவால் தீ விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

Family Coimbatore FireAccident FamilyMembersDeath
By Thahir Mar 15, 2022 10:06 AM GMT
Report

கோவையில் நிகழந்த மின்கசிவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திறனல் ஏற்பட்டு அம்மா மகள்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்கசிவால் தீ விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..! | Fire Accident Family Members Death Coimbatore

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர்.

இவரது கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பொண்ணும் அவரது அம்மாவும் படுக்கை அறையில் இன்னொரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து தீயனைபுதுறையினர் கூறும்போது வீட்டின் ஹாலில் இருந்த யூபி எஸ் சில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது.

இதை அனைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர் ஆனால் அதற்குள் புகையால் மூச்சு தினறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் அம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன்,

துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசிதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்துவருகின்றனர் இவ்விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்தினறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது.