பரபரப்பான தலைநகரம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எண்டோஸ்கோபி அறையில் தீ
டெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் திடீரென சற்று முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.