மது ட்ரீட்டு.. கொளுத்திவிட்டு ஓடிய யூடியூபர்கள், பயங்கர தீ விபத்து - கருகிய 36 படகுகள்!

India Andhra Pradesh Fire
By Vinothini Nov 21, 2023 05:31 AM GMT
Report

யூடியூபர்கள் கொளுத்திவிட்டதால் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

fire accident at visakhapatnam port

இந்த தீ விபத்தில் 36 படகுகள் முற்றிலுமாக தீயில் கருகி சேதம் அடைந்தன. 9 படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தியதில் யூடியூபர்கள் தீ வைத்ததாக கூறப்பட்டது.

இந்தியாவிற்கு வந்த சரக்கு கப்பல்.. கைவரிசை காட்டிய கிளர்ச்சியாளர்கள்!

இந்தியாவிற்கு வந்த சரக்கு கப்பல்.. கைவரிசை காட்டிய கிளர்ச்சியாளர்கள்!

மது ட்ரீட்டு

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான படகில் மது விருந்து நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த யூடியூபர்களுக்கு இடையே பண விஷயம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அதனால் போதையில் இருந்த சிலர் படகுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

fire accident at visakhapatnam port

அந்த சமயத்தில் அங்கு பயங்கர காற்று வீசியதால் தீ பரவி மற்ற படகுகளுக்கு தீ வேகமாக பரவியது. மேலும், படகுகளில் இருந்த சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து ஆந்திர மீன்வளத்துறை மந்திரி சீதிரி அபல்ராஜூ பேசுகையில், "துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும் " என்று கூறியுள்ளார்.