தேர்தல் முறைகேடு; ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் - நீதிமன்றம் அதிரடி!

Twitter United States of America World
By Jiyath Aug 10, 2023 09:41 AM GMT
Report

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

தேர்தல் முறைகேடு

கடந்த 2020ம் ஆண்டி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது.

தேர்தல் முறைகேடு; ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் - நீதிமன்றம் அதிரடி! | Fine For Twitter Not Releasing Trumps Records

இதனைத் தொடர்ந்து நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணைக்காக ட்ரம்ப்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்கக்கோரி ட்விட்டர் (இப்போதைய X ) நிறுவனத்திடம் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

அபராதம் 

ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிந்து 3 நாட்கள் ஆன நிலையில் முழுமையான தகவல்கள் எதையும் அந்நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில் அதிருப்தியடைந்த நீதிபதிகள் 'நீதிமன்ற உத்தரவை அவமதித்தது, தகவல்கள் முழுமையாக தருவதில் தாமதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.