இது என் மகனே இல்லை - மனைவி மீது சந்தேகப்படும் பிரபல வில்லன்
பிரபல நடிகர் மனைவி மீதே சந்தேகப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல வில்லன்
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமீர்கானின் 'சர்ஃப்ரோஷ்' என்ற படத்தில் தீவிரவாதியாக ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலமாகத் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவரின் மனைவி ஆலியா சித்திக்கும் நவாசுதீனுக்கும் மற்றும் இவரின் தாயாருக்கும் சமீபகாலமாக பல பிரச்சினைகள் இருந்து வந்ததாக தெரிகிறது.
பதறிய மனைவி
அதனையடுத்து ஆலியா சித்திக்கும் நவாசுதீனுக்கும் பிறந்த சொந்த மகனை அவர் தற்போது ஏற்க மறுப்பதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. இதனால் மரபணு சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு அவரின் மனைவி ஆலியா பதிலளிக்கையில் "இந்த பிரச்சனை முடிந்தவுடன் நான் நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்ய போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சினி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.