FIFA உலகக் கோப்பை 2022 - விறுவிறுப்புடம் நடைபெற உள்ள ‘Knock out’ கட்டம்...! - ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
FIFA உலகக் கோப்பை 2022 போட்டியில் விறுவிறுப்புடம் நாக் அவுட் கட்டம் நடைபெற உள்ளதால் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
விறுவிறுப்புடம் நடைபெற உள்ள ‘Knock out’ கட்டம்
இந்நிலையில், FIFA உலகக் கோப்பை 2022 போட்டியின் நாக் அவுட் கட்டம் கத்தாரில் இன்று இரவு தொடங்க உள்ளது. 16-வது சுற்றுக்கான போட்டிகள் மோத உள்ள அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாக் அவுட் கட்டம் நடைபெற உள்ளதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
Group stage complete ✅
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
It's a straight road to the #Qatar2022 Final for these 16 teams!#FIFAWorldCup