உலக கால்பந்து போட்டி - கோடிக்கணக்கில் கத்தாருக்கு செல்லும் நாமக்கல் முட்டை...!
உலக கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல்லிலிருந்து கோடிக்கணக்கான முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்ய உள்ளன.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
கத்தாருக்கு செல்லும் நாமக்கல் முட்டை -
இந்நிலையில், கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல்லிலிருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.