கத்தார் உலகக் கோப்பை.. மெஸ்ஸியின் கோப்பை கனவு நனவாகுமா?
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதி யுத்தம் இன்று இரவு களைகட்டவுள்ளது.
யாருக்கு கோப்பை
இன்றைய அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகளுக்கு இருந்தாலும் மெஸ்ஸியா அல்லது எம்பாப்பேவா என ரசிகர்களும் மோத தயாரகா உள்ளனர்.உலகின் உட்சபட்ச திருவிழாவின் கிளைமேக்ஸ் போட்டியான கத்தார் உலகக் கோப்பையின் இறுதி யுத்தம் இன்று நள்ளிரவு லூசாய்ல் மைதானத்தில் களைகட்டவுள்ளது.
1978 மற்றும் 86ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கையில் ஏந்திய அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக மகுடம் சூட காத்திருக்கிறது. அதே போல் 1998 மற்றும் 2018ம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் அணியும் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல முனைப்பில் உள்ளது.
காத்திருக்கும் மெஸ்ஸி
அதே சமயம் , உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது கை எட்டும் தூரத்தில் வந்துவிட்டது.கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவரும் நுஇலையில் இம்முறை அதை எட்டிப்பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க காத்திருக்கிறார்