இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது பிபா : காரணம் என்ன?
இந்திய காலபந்து கூட்டமைப்பின உரிமையினை பிபா ரத்துசெய்துள்ளது.
கால்பந்து போட்டி
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இந்திய கால் பந்து கூட்டமைப்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ளதால் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது பிபா.
மூன்றாம் நபர் தலையீடு
இது குறித்து பிபா கூறுகையில் மூன்றாம் நபர் தலையீடு உள்ளதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளது .
மேலும் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும் வேறு நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி, வரும் 28-ம் தேதி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.