கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடிச் சென்று உதவிய பெண் உதவி காவல் ஆய்வாளர் - வைரலாகும் வீடியோ
நெல்லை ரயில் நிலையத்தில் மூச்சு வாங்க கையில் குழந்தையுடன் நடந்து வந்த பெண்ணுக்கு உதவி காவல் ஆய்வாளர் ஓடிச் சென்று உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓடிச் சென்று உதவிய பெண் SI
நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுவாதிகா சக காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கர்ப்பிணி பெண் ஒருவர் கையில் சூடகேஸை இழுத்துக் கொண்டும் மற்றொரு கையில் குழந்தையுடன் நடைமேடை இரண்டில் இருந்து 1வது நடைமேடைக்கு நடந்து வந்துள்ளார். இதை பார்த்த பெண் உதவி காவல் ஆய்வாளர் சுவாதிகா ஓடிச் சென்று குழந்தையை துாக்கி கொண்டு வந்தார்.
குவியும் பாராட்டுக்கள்
கொளுத்தும் வெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடிச் சென்று உதவிய பெண் உதவி காவல் ஆய்வாளரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சுவாதிகாவை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலி இரயில்வே நிலையத்தில் ரயிலில் இருந்து தனது குழந்தையுடன் இறங்கி வந்த கர்ப்பிணி பெண் சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் லக்கேஜ் உடன் வந்தபோது 15-04-2023ம் தேதியன்று https://t.co/shf4cNXOIs https://t.co/6HaJaG2V4S pic.twitter.com/Yy4t5muZdI
— TIRUNELVELI CITY POLICE (@CityTirunelveli) April 17, 2023