மனசாட்சி இல்லையா மேடம்..! நோயாளிகளை மிரட்டும் பெண் டாக்டர் - நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் மா.சு?
மருத்துவர்கள் என்றாலே கடவுளுக்கு அடுத்த படியாக பார்த்து வருகிறது உலகம். இந்த நிலையில் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் நடந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவர்களின் இன்றியமையா சேவை
கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தை உலுக்கியது கொரோனா பெருந்தொற்று. அப்போது பல்வேறு தரப்பு மக்களும் உயிருக்கு போராடிய நிலையில் தன்னலம் கருதாமல் மருத்துவமனையிலேயே முகாமிட்டு சிகிச்சை அளித்து வந்தவர்கள் மருத்துவர்கள் அதை நாம் மறந்து விட முடியாது.
இப்படிப்பட்ட நல்ல மருத்துவர்கள் உள்ள நிலையில்,ஒரு சில மருத்துவர்களால் ஒட்டுமொத்தமாக கெட்டப் பெயர் ஏற்படுவதாக இணையவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளை திட்டித்தீர்த்த பெண் மருத்துவர்
இந்த நிலையில் பேஸ்புக் தளத்தில் உள்ள மேலவளவு மதுரை என்ற பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் மதுரை மாட்டம் மேலுாரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை கடுமையாக திட்டித்தீர்ப்பதுடன் அவர்களை வெளியேற சொல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இந்த மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.