மாப்பிள்ளை பார்த்த பெற்றோர் - மருத்துவமனையில் பெண் டாக்டர் செய்த அதிர்ச்சி செயல்

Marriage Death Dharmapuri
By Sumathi Jun 03, 2025 04:53 AM GMT
Report

குடும்பத்தினர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்ததால் பெண் தற்கொலை செய்துள்ளார்.

மன உளைச்சல்

தர்மபுரியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள் மோனிகா(27). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

மோனிகா

இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் தனியார் ஆஸ்பத்திரியில் அவர் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காதலால் 8 மாதம் கர்ப்பம்; ரயில் முன் பாய்ந்த காதலன் - காதலி எடுத்த முடிவு

காதலால் 8 மாதம் கர்ப்பம்; ரயில் முன் பாய்ந்த காதலன் - காதலி எடுத்த முடிவு

டாக்டர் தற்கொலை

உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் கதவை உடைத்து பார்த்ததில் உயிரிழந்த சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மோனிகாவிற்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

[BYD9I

ஆனால் அவருக்கு தற்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது அறையை ஆய்வு செய்ததில்,

மயக்க மருந்து பாட்டில்களும், ஊசிகளும் கைப்பற்றப்பட்டன. தனக்குத்தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.