கமல் ஹாசன் 'மகளுக்கு' நோய்...அவரே சொன்ன தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
பிரபல நடிகையான பாத்திமா சனா ஷேக் தனக்கு இருக்கும் நோய் குறித்து ரசிகர்களுக்கு சமூகவலைத்தளங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
பாத்திமா சனா ஷேக்
‘சாச்சி 420’ என்ற படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மகளாக சிறு குழந்தையாக நடித்தவர் தான் பாத்திமா சனா ஷேக். நன்கு வளர்ந்த பிறகு, நடிகர் அமீர்கானின் நடிப்பில் வெளியானி ‘தங்கல்’ என்ற படத்தில் மகளாக நடித்தார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் பாத்திமா சனா ஷேக். அந்த பதிவில், தனக்கு இருக்கும் நோய் குறித்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,
தங்கலுக்காக பயிற்சி எடுத்தபோது வலிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில்தான் நான் கண் விழித்தேன். என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. அப்போதுதான் எனக்கு எபிலெப்சி என்ற நோய் இருப்பது தெரிய வந்தது. என்னால் அதை நம்பமுடியவில்லை. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே எனக்கு எபிலெப்சி இருப்பதை கூறிவிடுவேன். இயக்குநர்கள் அனைவருக்கும் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். எபிலெப்சி நோயுடன் என் கெரியர் மெதுவாக சென்றுக்கொண்டிருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் கவலை
இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதற்கும் கவலைப்படாதீங்க... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.