Friday, Jun 27, 2025

நானும் மயானத்திலேயே... மகனை இழந்த தந்தையின் கண்ணீர்

Bengaluru
By Fathima 19 days ago
Report

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் மகனை இழந்த தந்தை ஒருவரின் செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 ஆண்டுகளில் முதன்முறையாக கிண்ணத்தை வென்ற ஆர்சிபி அணியால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

கொண்டாட்டங்கள் களைகட்டியது, இந்நிலையில் வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

 

இவர்களில் பூமிக் லக்ஷ்மண் (வயது 21) என்ற இளைஞரும் ஒருவர், அவரை அடக்கம் செய்த இடத்தில் தந்தை அழுது கொண்டிருக்கும் காட்சிகள் பார்ப்போரை கலங்க வைக்கின்றன.

அவர், எனது மகனுக்கு நடந்தது போன்று யாருக்கும் நடக்கக்கூடாது, நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என கதறுகிறார்.