"நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை" - மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் பேட்டி

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka
By Swetha Subash May 10, 2022 11:22 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

"நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை" - மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் பேட்டி | Father Wont Flee Country Says Namal Rajapaksa

இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். பிரதமர் பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

மேலும், பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்சே இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து அவரது குடும்பம் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

"நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை" - மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் பேட்டி | Father Wont Flee Country Says Namal Rajapaksa

இந்நிலையில் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சே, “என் தந்தை பாதுகாப்பாகவும், குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார்; நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை. எப்போதும் எங்கள் மக்களுடனே நிற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.