வேடசந்தூர் அருகே மகனின் பிறந்தநாளை கொண்டாட சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

accident dindukal vedachandur lorry and motorcycle victim spot dead
By Swetha Subash Jan 13, 2022 08:01 AM GMT
Swetha Subash

Swetha Subash

in விபத்து
Report

வேடசந்தூர் அருகே தனது ஒரு வயது மகனின் பிறந்தநாளை கொண்டாட சென்ற தந்தை லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான லாரியை,

அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் 55 என்பவர் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் இருந்து நூல் பண்டங்களை ஏற்றி கொண்டு கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா புதுகுடியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார்த்திக் கோவையில் ஒரு பேக்கரியில் பணி செய்து வந்தார். இந்நிலையில் தனது ஒரு வயது மகனின் பிறந்தநாளுக்காக சொந்த ஊர் சென்று கொண்டிருந்தபோது வேடசந்தூர் அருகே அய்யனார் கோவில் என்னுமிடத்தில்,

எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விபத்தில் சிக்கிய கார்த்திக் என்பவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும் மனிஷா என்ற (9) வயது மகளும் மிர்சிகா (4) என்ற மகளும் தர்னீஸ்(1) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்

கடைக் குட்டியாக பிறந்த ஆண் குழந்தையின் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக

தான் பணி செய்யும் பேக்கரியில் இருந்து கேக்குகளை பார்சல் எடுத்துக் கொண்டு வரும்போதுஎதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் சிக்கிய கார்த்திக் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது