கூலிப்படை வைத்து நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட தந்தையை கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம்

Son Police investigation Traumatic event போலீஸ் விசாரணை father-murder தந்தை கொலை மகன் தலைமறைவு
By Nandhini Mar 22, 2022 06:38 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, கண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் உமாபதி (65). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லோகேஸ்வரி என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உமாபதியின் மனைவி இறந்துபோனதால் மகள், மகனுடன் வாழ்ந்து வந்தார். உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் ஒரு வீடும், காயரம்பேடு பகுதியில் ஒரு வீடும் இருக்கிறது.

ஒரு வீட்டை சரவணனுக்கும், இன்னொரு வீட்டை மகள் வழி பேரனான பரமேஸ்வரனுக்கும் உமாபதி எழுதி வைத்துள்ளார். ஆனால், இரண்டு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வைக்க சொல்லி, சரவணன் தொடர்ந்து உமாபதியிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால், அதற்கு உமாபதி சம்மதிக்காமல் மறுப்பு தெரிவித்து வந்தார்.

கூலிப்படை வைத்து நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட தந்தையை கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம் | Father Murder Son Police Investigation

இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் உமாபதி வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் உமாபதியை வழிமறித்தது.

வண்டியை நிறுத்திய உமாபதியை சராமரியாக அந்த கும்பல் குத்தி வெட்டிச் சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே மயங்கி விழுந்த உமாபதி, துடிதுடித்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக அந்த கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டது. அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உமாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் மகனையும், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.