சுதந்திர தினம் அன்று விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

Governor of Tamil Nadu
By Thahir Aug 06, 2022 12:36 PM GMT
Report

ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்ற சுதந்திர தினத்தன்று காலை முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விவசாய சங்க கூட்டம் 

திருவாரூர் , நாகை , தஞ்சாவூர் மாவட்ட தமிழக காவிரி விவசாய சங்கங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .

Formers

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பி.ஆர்.பாண்டியன். காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நீண்ட போராட்டத்திற்கு இடையே மத்திய அரசின் ஒப்புதலை பெற்று கடந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி 2020 ஆம் ஆண்டு அறிவித்தது .

அதனை தொடர்ந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் அதனுடைய இயந்திரங்கள் , புதிய கிணறு அமைக்கும் பணிகள் , ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான முயற்சிகளை தடுக்கபட்டு வாகனங்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டது .

பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு 

இந்த நிலையில் திடீரென தற்போது காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை சட்டத்திற்கு புறம்பாக இன்றைக்கு புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் அனுமதி கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகின்ற நடவடிக்கையை துவங்கியிருக்கிறது .

குறிப்பாக மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஆசியாவிலேயே மிக அதிகமான அடர்த்தியை உள்ள மிகப்பெரிய ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு திறக்க கூடாது என தடை செய்திருந்தும் .

அதனை திறந்து வணிகத்திற்கு பயன்படுத்துவதற்கு ஓஎன்ஜிசிக்கு மறைமுகமாக தமிழக அரசு துணை போகிறது .

உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு 

எனவே தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரையிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்கின்ற மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மன்னார்குடியில் நடத்த இருக்கின்றோம் .

P. R. Pandian

பல அரசியல் கட்சிகள் , சமூக அமைப்புகள் , போராட்ட குழுக்கள் ஆயிரம் பேருக்கு மேல் அப்பார்பட்டிருக்கின்ற அனைத்து அமைப்புகளும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள் விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள் .

இந்த போராட்டம் பெற்ற சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து நடக்க இருக்கிறது . முதலமைச்சர் மூட உத்தரவிடுகிறார் ஆனால் அதிகாரிகளை அச்சுறுத்தி ஆளும் அதிகாரம் மிக்கவர்களால் தடுத்து நிறுத்தப்படுகிற இந்த கொடுமை காவிரி டெல்டாவில் அரங்கேறி இருக்கிறது .

எனவே மக்கள் மிகுந்த அச்சத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் விவசாயிகளின் விலை நிலங்கள் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது எனவே சுதந்திர தினத்தை கொடியேற்றி மரியாதை செலுத்தி உறுதி ஏற்றுக்கொண்டு அன்றைய தினமே உண்ணா நோன்பை நடத்துவது என்று முடிவெடுத்து இருக்கிறோம் .

இந்த சுதந்திர தினத்தை மதிக்கின்ற போராட்டம் சுதந்திரத்தை பறிபோகும் உரிமைகளை வெளிக்கொண்டுவரும் போராட்டம் தமிழக அரசின் அறநிலையத்துறை விவசாயிகள் பல ஆண்டுகளாக கோயில் நிலங்களுக்கு சொந்தமான குத்தகை நிலங்கள் இன்றைக்கு குத்தகை பாக்கி என்பதை காரணம் காட்டி வெளியேற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம் .

உரம் தட்டுப்பாடு

இதனை உடனடியாக கைவிட வேண்டும் விவசாயிகளுக்கு குருவை தொகுப்பு வழங்க வேண்டும் என அறிவித்த தமிழக அரசு இன்றைக்கு அரை மூட்டை அளவிலேயே தான் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

குறிப்பாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் என அறிவிப்பு செய்து விட்டு இன்றைக்கு அரை ஏக்கர் என்கிற அளவில் விடுவிக்கப்படுகிறது.

இந்த அரை ஏக்கருக்கு விநியோகம் செய்யப்படுகின்ற பயனாளிகளுக்கு 400 ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்கள் விருப்பத்திற்கான பொருட்களை காலாவதியான பொருட்களை வழங்க முயற்சி எடுக்கிறார்கள் விளைநிலங்களில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

வேளாண்மை துறை இன்று மிகப்பெரிய அளவில் கிராமங்களில் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் பெற்ற உரிமைகள் பறிபோயிருக்கிறதுகுருவை காப்பீட்டை தமிழக அரசு கைவிட்டுருப்பது மன்னிக்க முடியாத குற்றம் .

கட்சி தலைவர்களை சந்திக்க திட்டம் 

பெற்ற உரிமை பறிபோகிறது திமுக ஆட்சியில் எனவே விவசாயிகளுடைய போராட்டம் வலிமையான போராட்டமாக தீவிரமாக களமிறங்க போகிறோம்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வருகிற 8 , 9 தேதிகளில் சென்னையில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து எங்கள் வேதனைகளை வெளியிட்டு ஆதரவு கோர இருக்கிறோம் என்றார் .