கிரிக்கெட் டிக்கெட்டை பெற 2 கி.மீ துாரம் சென்னையில் காத்திருந்த ரசிகர்கள்

MS Dhoni M K Stalin Chennai Indian Cricket Team
By Thahir Mar 18, 2023 11:53 AM GMT
Report

நள்ளிரவு முதல் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் 2 கி.மீட்டர் துாரத்திற்கு டிக்கெட்டை பெற காத்திருந்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், ரூ.139 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று கூடுதலாக 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய கேலரி அமைக்கப்பட்ட நிலையில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Fans waiting 2 km in Chennai to get cricket ticketsFans waiting 2 km in Chennai to get cricket tickets

இந்த மைதானத்தில் வரும் 22ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

2 கி.மீ துாரத்திற்கு காத்திருந்த ரசிகர்கள் 

இதற்கான நேரடி டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

Fans waiting 2 km in Chennai to get cricket tickets

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஏறத்தாழ சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக 2 கி.மீ துாரத்திற்கு ரசிகர்கள் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.