கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் ஐஸ்வர்யா தனுஷ் செய்த காரியம் - விமர்சிக்கும் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ஹோலி கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் இதனை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான காதல் ஆல்பம் ஒன்றிற்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ் அவரை தோழி என்றே குறிப்பிட்டார். இதனைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் ஹோலி கொண்டாடிய போட்டோக்களை ஐஸ்வர்யா சமூகவலைத்தளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா தனியாக இருப்பது, கொண்டாட்டம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களைதான் ஷேர் செய்து வரும் இவர் இதுவரை மகன்களுடன் இருக்கும் போட்டோவை பகிரவில்லை.
ஆனால் தனுஷ் கிடைக்கும் ஓய்வு நேரத்தை தனது மகன்களுடன் கழித்து வருகிறார். ஏற்கனவே தனது கொடைக்கானலில் தனது மூத்த மகனுடன் இருந்த போட்டோவை வெளியிட்டிருந்தார் தனுஷ். அதன்பிறகு நேற்று இளையராஜாவின் இசைக் கச்சேரியை மகன்களுடன் கண்டுகளித்த போட்டோவை வெளியிட அது வைரலானது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் குடும்பத்தை பற்றியோ குழந்தைகளை பற்றியோ எந்த கவலையும் இல்லையா உங்களுக்கு? என சரமாரியாக ஐஸ்வர்யாவிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.