"திரும்பி வந்துடாத" - இந்திய அணி வீரருக்கு பெருகும் எதிர்ப்பு
இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. நேற்று நடந்த 3வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாயினர்.
இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ரன் எதும் எடுக்காமல் வெளியேறினார்.
இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடாமல் கிடைத்த வாய்ப்பை எல்லாம் வீணடித்த சஞ்சு சாம்சன் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு இதுவே கடைசி போட்டியாக இருக்க வேண்டும், இனி இவருக்கு வாய்ப்பே கொடுக்க கூடாது என ரசிகர்கள் கடுமையாக பேசி வருகின்றனர்.
You May Like This Video