மனைவியை கண்கலங்காமல் பார்த்தால், அவன் மாவீரன் - நடிகர் சிவகார்த்த்திகேயன் பேச்சு!

Sivakarthikeyan Tamil Cinema D Imman Tamil Actors
By Jiyath Oct 18, 2023 09:30 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்பட விழாவில் பேசியதை பதிவிட்டு ரசிகர்கள் அவரை தாக்கி வருகின்றனர்  

இமான்-சிவா விவகாரம்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மனைவியை கண்கலங்காமல் பார்த்தால், அவன் மாவீரன் - நடிகர் சிவகார்த்த்திகேயன் பேச்சு! | Fans Attack Sivakarthikeyan On D Imman Issue

இதனால், இமான் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று இணையவாாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர்.  

இந்த சர்ச்சைக்கு மத்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதன், நானும் இமானும் பிரியக்கூடாது என்றுதான் அவர் நினைத்தார்" என்று தெரிவித்தார்.

ஓவியா அதை செய்தால் மட்டும்..? பணக்காரி பணக்காரி போலதான் நடப்பாள் - வனிதா விஜயகுமார்!

ஓவியா அதை செய்தால் மட்டும்..? பணக்காரி பணக்காரி போலதான் நடப்பாள் - வனிதா விஜயகுமார்!

ரசிகர்கள் தாக்கு

இந்நிலையில் மாவீரன் திரைப்பட நிகழ்ச்சியின் போது சிவகார்த்திகேயன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் மாவீரன் என்றால் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

மனைவியை கண்கலங்காமல் பார்த்தால், அவன் மாவீரன் - நடிகர் சிவகார்த்த்திகேயன் பேச்சு! | Fans Attack Sivakarthikeyan On D Imman Issue

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் "பெண்களையும், தன் மனைவியையும் கடைசி வரை கண்கலங்காமல் வைத்து பார்த்துக்கொள்ளும் ஆண்கள் ஒவ்வொருவரும் மாவீரன் தான்" என்று சிவகார்த்திகேயன் பேசியிருப்பார். இந்த வீடியோவை இப்போது இணையவாசிகள் பதிவிட்டு 'அடுத்தவர் மனைவியையா?' என்று சிவகார்த்திகேயனை தாக்கி வருகின்றனர்.  

You May Like This Video