டி 20 கிரிக்கெட் : பிரபல இந்திய வீரர் விலகல், காரணம் என்ன?

Indian Cricket Team South Africa National Cricket Team
By Irumporai Sep 27, 2022 02:59 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தீபக் ஹூடர் விலகிய நிலையில், அவருக்குப் பதில் பிரபல வீரர் ஷ்ரேயாஷ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி-20 தொடர்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தென்னாப்பிரிக்க அணி வரும் 28 ஆம் தேதி முதல், அக்டோபர் 2 ஆம் தேதி வரை போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட உள்ளது

முதல் போட்டி, 28 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், அக்டோபர் 2 ஆம் தேதி 2 வது போட்டி: கவுகாத்தியிலும், அக்டோபர் 4 ஆம் தேதி 3 வது போட்டி: இந்தூரிலும் நடைபெறஉள்ளது.

டி 20 கிரிக்கெட் : பிரபல இந்திய வீரர் விலகல், காரணம் என்ன? | Famous Indian Player Quit

தீபக் ஹூடர் விலகல்

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் ஹூடா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்குப் பதில், ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்குப் பதில், ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.