பிரபல இயக்குநர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கே.பி.சஷி (64) திருச்சூரில் காலமானார்.
இயக்குனர் கே.பி.சஷி காலமானார்
உடல் நலக் குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குனர் கே.பி.சஷி (64) திருச்சூரில் காலமானார்.
இயக்குநர் சஷியின் திடீர் மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கம்யூனிஸ்ட் சிந்தனையாளரான கே.தாமோதரனின் மகன் சஷி என்பது குறிப்பிடத்தக்கது.
1994ல் வெளிவந்த ‘இலையும், முள்ளும்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் சஷி, அந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல ஆவணப் படங்களையும் இயக்கியுள்ள இயக்குநர் சஷி, படிக்கும் போதே கார்ட்டூன் துறையில் பணியாற்றியவர்.
திரையுலகினர் இரங்கல்
கடந்த 2003ல் வெளியான 'ஏக் அலக் மௌசம்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதே போல் பல்வேறு மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.பி.சஷியின் மரணம் மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இவரது மறைவுக்கு நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.