துாக்கில் தொங்கிய பிரபல நடிகை - ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!
வங்காள மொழி டி.வி.நடிகை பல்லபி டேய் தனது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்கு வங்காளத்தைச் சேரந்தவர் பல்லபி டேய் 21 வயதான இவர் தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருகிறார்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது ஆண் நண்பருடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
வீட்டின் படுக்கையறையில் நேற்று பல்லபி டேய் திடீரென துாக்கில தொங்கினார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆண் நண்பர் அலறி துடித்தார்.
பின்னர் அருகில் குடியிருப்போர் உதவியுடன் பல்லபி டேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பல்லவி டேயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரபல நடிகை துாக்கில் சடலமாக தொங்கி சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.