Nepal Flood: உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு

Nepal Flood
By Fathima Sep 02, 2026 06:58 AM GMT
Report

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்கப்பெறாததால் உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர்.

நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரசுவா உட்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் உள்ளூர், வெளிநாட்டு பயணிகள் சிக்கிக்கொண்டனர், இதுவரையிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Nepal Flood: உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு | Family Performs Funeral Rites

இவர்களில் பலரது சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது, 4 ஆயிரம் பேரை காணவில்லை, அவர்களுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

இந்நிலையில் இன்று காத்மாண்டு பசுபதிநாத் கோவில் வளாகத்தில் உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

காணாமல் போனோரின் உடல்கள் கிடைக்காத நிலையில் அவர்களின் உருவ பொம்மைகளுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அனைவரின் கண்களை குளமாக்கியது. 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17