தமிழர்கள் தீவிரவாதிகளா? சர்சையான திபேமிலி மேன் 2 ட்ரைலர்!
அமேசானில், வெளியாக உள்ள தி ஃபேமிலி மேன் - சீஸன் 2ல் தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Ban the Series !#FamilyMan2_against_Tamils pic.twitter.com/vB64vcx8dA
— ꧁༺தாரிகா༻꧂ (@tarika_off) May 19, 2021
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என்றும் இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லரை அமேசான் வெளியிட்டது.
முதல் பாக தொடரில் கதை களம் மும்பையில் நடந்ததாக காட்சி படுத்தபட்டிருக்கும் இந்த சீஸனில் கதையின் ஒரு பகுதி சென்னையில் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
சர்சையினை ஏற்படுத்திய சமந்தா காட்சி:
இதில் ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள்தான் தற்போது சமூகவலைத்தளங்களில்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
[
இந்த ட்ரெய்லரில் வரும் அதிகாரி ஒருவர், "நமக்குக் கிடைத்த தகவல்களின்படி ஐஎஸ்ஐஎஸ் குழுவுக்கும் அந்த கலகக்குழுவிற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. அதனை கண்டறிய வேண்டும்" என பேசுகிறார்.
தமிழ் போராளியைப் போல காட்டப்படும் சமந்தா ‘ ‘நான் எல்லோரையும் சாககொல்லுவேன்" என்று பேசுகிறார்.
இதில் வரும் காட்சியில் இலங்கை நாட்டின் வரைபடமும் போராளி சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
இதில் கலகக் குழு என்று சொல்வது, (விடுதலை புலிகளை)தமிழ் போராளிகளைத்தான் என பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.
இரண்டாவது சீஸன் சர்சைதொடர்பாக இயக்குநர் ராஜ் நிதிமோருவும் கிருஷ்ணா டி.கேவும் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் சமந்தாவின் பாத்திரம் மிகத் தீவிரமான பாத்திரம் என்றும் கூறியுள்ளனர்.
விளக்கம் தரும் இயக்குநர்கள்:
அதே சமயம் எந்த வன்முறையையும் நியாயப்படுத்தவில்லை. நாங்கள் இதில் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்என்கிறார்கள் இந்த படத்தின் இயக்குநர்கள்.
ஏன் சர்ச்சை:
The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு அமைப்பில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.
முதல் சீஸனில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரி தடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
முதல் பாகத்தில் ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் ராஜி பெண் போராளி பாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார்.
முதல் சீசனில் மலையாளிகளை ஐஎஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது போல் சித்தரித்து எதிர்ப்பை சந்தித்தது.
இந்த நிலையில் தற்போது தமிழர்களை இதேபோல் தீவிரவாதிகளாக தி பேமிலி மேன் 2 சித்தரிக்கிறது என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.
ஒடிடி தளங்களில் திரைப்படங்களுக்கு உள்ளது போல பெரும் கட்டுப்பாடுகள் கிடையாது. இது நல்ல விஷயம் தான் .
அதே சமயம் இதனை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மக்களின் உரிமைக்காக போராடும் நபர்களின் வாழ்க்கையினை கூறுகிறோம் என்ற பெயரில் கொச்சை படுத்த கூடாது என்பதுதான் அனைவரது கருத்தாக உள்ளது.
{{ஆதாரம் : பிபிசிதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் }}