கடன் சுமை அதிகரிப்பு - குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு நிறைய கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சரவணன் இன்று காலை வழக்கம் போல எழுந்து வீட்டை திறந்து கோலமிட்டு சற்று நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீடு அதிக நேரமாக பூட்டியே கிடந்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த சரவணன், அவரது மனைவி விஜி என்ற ஸ்ரீநிதி, மகள்கள் மகாலட்சுமி, அபிராமி மற்றும் மகன் அமுதன் என்ற ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்ட உறவினர்கள் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான போலிசார் வந்து சோதனை நடத்தியதில் அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் தன்னை தனது குடும்பத்தினர் கடனாளியாக ஆக்கி ஒரு ரூபாய் கூட குடும்பத்திற்கு ஒதுக்க முடியாமல் செய்துள்ளதாக கடிதம் எழுது வைத்துவிட்டு தற்கொலை கொண்டதாக கடித்ததை கைப்பற்றிய போலிசார்
உடல்கள் அனைத்தையும் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.