ஹெலிகாப்டரில் பறந்து வந்த பச்சிளம் குழந்தை! சுவாரசியமான பின்னணி காரணம்

child helicopter
By Fathima Apr 23, 2021 01:30 PM GMT
Report

ராஜஸ்தானில் உள்ள கிராமமொன்றில் 35 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளதால், ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபாத், அவரது மனைவி சுகி தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகிதேவிக்கு கடந்த மாதம் அம்மாநிலத்தின் நகவுர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஹனுமன் பிரஜாபாத் குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் குழந்தை பிறந்ததால், அவர்களது குடும்பத்தினர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிபோயினர். 


எனவே குழந்தைக்கும், தாய்க்கும் மிகச்சிறந்த வரவேற்பு அளிக்க முடிவெடுத்தனர், இதன்படி குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வர முடிவு செய்தனர்.

இதற்காக 4.5 லட்ச ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து பிரஜாபாத் கூறுகையில், என்னை பொறுத்தவரை பெண், ஆண் என பாரபட்சம் கிடையாது, என் மகளை நன்றாக படிக்கவைத்து அவளது கனவுகளை நிறைவேற்றுவேன் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அக்குழந்தைக்கு “ரியா“ என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.