சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல்
பிரபல தொகுப்பாளினி ஒருவரை மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கர்ப்பமாக்கியதாக
விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்ற சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சமீபகாலமாக விஜே சித்ரா தற்கொலை குறித்து அவரது தோழி ரேகா நாயர் பல அதிர்ச்சிகரமான தகவலை கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், ஹேம்நாத்துடன் பிரபல தொகுப்பாளினி ஒருவர் நெருக்கமாக பழகிய நிலையில் அவரால் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கர்ப்பமான செய்தியை கூறி திருமணம் செய்யுமாறு அந்த தொகுப்பாளினி கூறினார். ஆனால் அதற்கு தான் காரணமல்ல என்றும் திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது என ஹேம்நாத் மிரட்டியதாகவும் ரேகா நாயர் கூறியுள்ளார்.
அதன்பின் கருவை கலைத்த அந்த தொகுப்பாளினி இன்று வரை வருத்தப்பட்டு வருகிறார். மேலும் தனக்கு தெரிந்து சித்ரா மரணத்திற்கு பிறகு 11 பெண்களுடன் ஹேம்நாத் அடிக்கடி உல்லாசமாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.