என் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு - பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

By Thahir May 27, 2022 12:20 AM GMT
Report

இந்தி நடிகர் கரண் மெஹ்ரா தன் மனைவியும் நடிகையுமான நிஷாவுக்கும் அவரின் வீட்டில் உள்ளவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தி டிவி சீரியல் மற்றும் படங்களில் நடத்து வருபவர் கரண் மெஹ்ரா இவர் நடிகை நிஷா என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

என் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு - பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு..! | False Contact With My Wife And Him Famous Actor

இவர்கள் இடையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கரண் மெஹ்ரா இந்தி சின்னத்திரையில் அதிக சமபளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்.

இவர் இந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிலையில் அவரது மனைவி நிஷா தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடியை எடுத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த நிஷா கரண் தன்னை தாக்கியதாகவும்,அவருக்கு கள்ளதொடர்பு இருப்பதாகவும் பேட்டியளித்தார்.

நிஷாவை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரண் ஜாமீனில் வெளியே வந்தார். நிஷா தொடர்ந்த வழக்கில் கரண் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த நிலையில் கரண் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஷாவுக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதை அந்த நபரே ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.அதன் பின் அவரை எங்கள் வீட்டிற்குள் அனுமதித்தேன். மீண்டும் வாழ்க்கையை புதிதாக தொடங்க நினைத்தேன்.பின்னர் மகன் கவிஷ் பிறந்தான்.

அந்த கள்ளத்தொடர்பு ஆசாமி இன்னும் எங்கள் வீட்டில தான் வசித்து வருகிறார்.அவர் 11 மாதங்களாக எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.