10 ஆண்டு சிறை...ராகுல் காந்திக்கு சிக்கலா? லட்சத்தீவு எம்.பி வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
லட்சத்தீவு எம்.பி'க்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை கேரள நீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில், அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், ராகுல் காந்தி வழக்கிலும் இந்த தீர்ப்பு எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
லட்சத்தீவு எம்.பி
லட்சத்தீவு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்வான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கில் கவரொட்டி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கவரொட்டி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கேரள நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை திரும்ப பெற்றது.
தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இந்நிலையில் முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேரளா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முகமது பைசலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. இருப்பினும் முகமது பைசல், எம்.பி. என்பதால் அவருக்கான சலுகைகள் தொடரும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் கேரளா உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் மறு ஆய்வு செய்து விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் காந்திக்கும் சிக்கலா?
முகமது பைசலின் வழக்கு ராகுல் காந்தியின் வழக்கில் முன்மாதிரியாக பார்க்கப்படும் நிலையில், இதே போல தீர்ப்பு ராகுல் காந்திக்கும் வழங்கப்படலாமா? என்ற கேள்விகள் தற்போது அதிகளவில் எழுந்துள்ளது.