விடுவேனா நானு.. மிஸ்ஸே ஆகாது..பீல்டிங்கில் பக்கா கேட்ச் பிடிச்ச டூபிளசிஸ் - வைரலாகும் புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.
சுப்மன் கில் நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு கடும் தொல்லை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலில் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே அவசரப்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட்டானார்.
இந்தநிலையில், இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் சிக்ஸர் நோக்கி அடித்த பந்தை, பவுண்டரி லைனில் நின்றிருந்த டூபிளசிஸிஸ் சாமர்த்தியாக கேட்ச் பிடித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீல்டிங்கில் டூபிளசிஸ் உலகின் நம்பர் 1 வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.