3 முறை முதலமைச்சர் 70 வயதில் மறுமணம் - 30 பேரக் குழந்தைகள் என்.டி.ராமா ராவின் வரலாறு
தமிழ்நாட்டிற்கு எம்ஜிஆர் எப்படியோ அப்படி தான் தெலுங்கு திரையுலகத்திற்கு என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தார்.
சினிமாவில் சூப்பர் ஸ்டார்
1923 ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார் நந்தமுரி டரகரா ராமாராவ் சிறு வயதில் இருந்தே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
1947 ஆம் ஆண்டு மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். பின்னர் பாதாள பைரவி படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமானார். 1952 ஆம் ஆண்டு கல்யாணம் பண்ணிப்பார் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
ஆந்திரா மக்கள் இவரை இன்றளவும் கடவுளாக கொண்டாடி வருகின்றனர். பல திரைப்படங்களில் நடித்து பெருமை சேர்த்தமைக்காக 1968-ல் பத்மஸ்ரீ விருது என்.டி.ஆருக்கு வழங்கப்பட்டது. தமிழில் மாயா பஜார், லவகுசா உள்ளிட்ட திரைப்படங்களில் என்.டி.ஆர் நடித்துள்ளார்.
3 முறை முதலமைச்சர்
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்.டி.ராமா ராவ்.1980களில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று தீவிரமாக அரசியலில் ஈடுப்பட்டார். இதையடுத்து 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியை நிறுவினார்.
பின்னர் 1983 - 1994 காலகட்டத்தில் என்.டி.ஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். இவர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சினிமா துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தினார்.
கிராமப்புற பகுதிகளில் திரையரங்குகள் அமைய காரணம் என்.டி.ஆர் தான்.தனது கட்சியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல சைதன்யா ரதம் என்னும் பயணத்தை என்.டி.ஆர் மேற்கொண்டார்.
70 வயதில் மறுமணம்
1993 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய 70 வயதில் லஷ்மி சிவபார்வதி என்னும் பேராசிரியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். லஷ்மி பார்வதி சிறு வயது முதல் தீவிர என்.டி.ஆரின் தீவிர ரசிகையாக இருந்து வந்த நிலையில் அவரை பேட்டி எடுக்க சென்ற போது காதலில் விழுந்தார்.
இந்த நிலையில் 1995 ஆம் ஆண்டு கட்சியில் நடந்த உட்கட்சி பூசல் காரணமாக தெலுங்கு தேசம் கட்சி உடைந்தது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சந்திரபாபு நாயுடு ஓட்டெடுப்பு நடத்தி முதலமைச்சரானார். என்.டி.ஆர் திரைக்கு வரும் முன்னரே திருமணமனமானவர் .
மாரடைப்பால் காலமானார்
1942ம் ஆண்டு பசவ தாரகம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் . இவர் 1985ம் ஆண்டு புற்றுநோய் காரணத்தால் மரணம் அடைந்தார். இவரது நினைவாக பசவதாரகம் இந்தோ-அமெரிக்கா புற்றுநோய் மருத்துவமனையை ஐதராபாத்தில் 1986ல் திறந்தார் என்டிஆர். மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது 11 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் வாழ்ந்து வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி காலமானார் . அவருக்கு அப்போது வயது 72.