Fact Check: நடுரோட்டில் கொல்லப்பட்டாரா இளம்பெண் பத்திரிக்கையாளர்?

kumbh mela fact check Pragya Mishra
By Fathima Apr 20, 2021 12:14 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா அதி தீவிரமடைந்துள்ள நிலையில், கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியுள்ளது, இதுகுறித்து இளம்பெண் பத்திரிக்கையாளரான ப்ரக்யா மிஸ்ரா செய்தி வெளியிட்டிருந்தார்.

இதற்காக நடுரோட்டில் வைத்து அவர் கொல்லப்பட்டதாக சிசிடிவி காட்சிகள் வைரலாகின, இது பொய் என்றும், தான் உயிருடன் நலமாக இருப்பதாகவும் ப்ரக்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.