ஆண் நண்பருக்கு வீடியோ காலில் ஆடைகளை கழட்டி நிர்வாணமாக காட்சி அளித்த குடும்ப பெண் - இறுதியில் நடந்த பயங்கரம்..!

India
By Thahir May 16, 2022 07:38 PM GMT
Report

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய ஆண் நண்பரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் பிரஷாத்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி 32 வயதான இவருக்கு திருமணமாகியுள்ளது.

ஆண் நண்பருக்கு வீடியோ காலில் ஆடைகளை கழட்டி நிர்வாணமாக காட்சி அளித்த குடும்ப பெண் - இறுதியில் நடந்த பயங்கரம்..! | Facebook Friendship Blackmail Video Man Murder

இதனிடையே முகநுால் பக்கத்தில் புகைப்படக் கலைஞரான யாஸ்மா குமார் என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முகநுால் மூலம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். செல்போன் எண்களை பரிமாறி கொண்ட இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளடைவில் எல்லை மீறியுள்ளது.

காதலன் யாஸ்மா குமார் நிர்வாணமாக உன்னை காண வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று தனது ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக வீடியோ காலில் நின்று காட்சியளித்துள்ளார்.

அப்போது யாஸ்மா குமார் தனது மொபைல் போனில் ரெக்கார்ட் செய்துள்ளார். அதன் பின் அந்த வீடியோ காட்சிகளை கொண்டு நீயும் உன்னுடைய சொத்தும் வேண்டும்,இல்லை என்றால் வீடியோ வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா ரெட்டி எப்படியாவது அவனை தீர்த்துக்கட்ட(கொலை) வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

தனது மற்றொரு முகநுால் நண்பரும் ஓய்வு பெற்ற கல்லுாரி முதல்வருமான அசோக் மற்றும் அவர்களின் நண்பர்களின் உதவிடன் யாஸ்குமாரை வீட்டிற்கு வரவழைத்து தலையில் சுத்தியால அடித்து கொலை செய்து உடலை சாலையில் வீசியுள்ளனர்.