உன் தேவைக்கு என்னால் வர முடியாது?..த்ரிஷா, ராகவலாரன்ஸ் இடையே உச்சகட்ட மோதல்..!
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா,பிரபு ஆகியோர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திமுகி.
சந்திரமுகி-2
இந்த படத்தினை இயக்குநர் பி.வாசு இயக்கி வந்த நிலையில் சந்திரமுகி - 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் கால் சீட் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த மற்ற படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருவதால் எந்த பதிலும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து இயக்குநர் பி.வாசு சந்திரமுகி-2 திரைப்படத்தில் ராகவலாரன்ஸை திரைப்படத்தில் நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
விலகிய த்ரிஷா
படத்தின் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் கதையை சொல்லியுள்ளார் பி.வாசு ஆனால் சாய்பல்லவி கதையில் அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பி.வாசு இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே த்ரிஷா பட வாய்ப்புகள் இன்றி வீட்டில் இருந்து வருகிறார்.
இதையடுத்து பி.வாசு சந்திரமுகி 2 படத்தில் நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ராகவலாரன்ஸ் மற்ற படங்களில் நடித்து வருவதால் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நேரம் கிடைக்கும் போது நடித்து வருகிறார்.
படத்தில் நடிப்பதற்கு திடீர் திடீரென நடிகை த்ரிஷாவை அழைத்து வந்ததால் கடுப்பான நடிகை த்ரிஷா நீங்கள் கூப்பிட்ட உடன் என்னால் வரமுடியாது.
உங்கள் தேவைக்கு நான் ஆள் கிடையாது என்று சண்டையிட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை லஷ்மிமேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.