ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் நோட்டுக்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னை அம்பத்துாரில் ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் நோட்டுக்கு பதில் 500 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கூடுதல் பணம்
சென்னை அம்பத்துாரில் உள்ள இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அருகே ஏடிஎம் மையமும் இருந்து வருகிறது.
அந்த ஏடிஎம் மையத்தில் வழக்கம் போல் இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் 8000 ஆயிரம் ரூபாய் எடுக்க பொத்தனை அழுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு 20000 ஆயிரம் ரூபாய் இயந்திரத்தில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வங்கியில் உள்ள நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து 6 வாடிக்கையாளர்களுக்கு இது போன்று கூடுதல் பணம் வந்ததை அடுத்து அவர்களும் புகார் அளித்துள்ளனர்.
வங்கி நிர்வாகம் விளக்கம்
இந்நிலையில் ஏடிஎம் மையத்தை வங்கி அதிகாரிகள் மூடினர். பின்னர் அவர்கள் தொழில்நுட்ப குழுவினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வங்கி நிர்வாகம் தெரிவிக்கையில் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்ததால் தவறு நிகழ்ந்ததாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.