மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்ட லஞ்சம் - மஹூவா மொய்த்ரா எம்.பி பதவி நீக்கம்?
மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரை செய்துள்ளது.
மஹுவா மொய்த்ரா
பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில்,விசாரணை நடத்த மக்களவை நெறிமுறை குழுவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். தொடர்ந்து, நெறிமுறை குழு முன்பு மஹுவா மொய்த்ரா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
[SJ3ZG6R
பதவி நீக்கம்?
இந்நிலையில், குழு 500 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில், “நாடாளுமன்ற இணையதளத்தில், தனது சார்பில் கேள்விகளை கேட்க ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை (நண்பர்)அனுமதித்ததாக மொய்த்ரா ஒப்புக்கொண்டுள்ளார். இது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நெறிமுறை குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு மக்களவை தலைவருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வரைவு அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதற்கு 6 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை அடிப்படையில், இந்த அறிக்கை ஏற்கப்பட்டது. மக்களவை தலைவர்ஓம் பிர்லாவிடம் இந்த அறிக்கைஇன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.