வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட போகும் இந்திய வீரர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Viratkohli Rohitsharma INDvWI
By Petchi Avudaiappan Jan 26, 2022 07:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லாத வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னாப்பிரிக்கா தொடரை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20  மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

முன்னதாக, இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் போட்டிகள் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. மேலும், டி20  போட்டிகள் முறையே கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 

ஆனால் கடைசியில் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த தொடரில் கேப்டன்  ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்க உள்ளார். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அவருக்கு பதிலாக முகமது ஷமி மீண்டும் திரும்புவார் என கூறப்படுகிறது. 

அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முற்றிலும் சொதப்பிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளார். பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தங்கள் அற்புதமான ஆல்ரவுண்டர் செயல்பாட்டிற்குப் பிறகு அணியில் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மூத்த ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை, இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் அவர்களுக்கு பதில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

உன்