“ரவி சாஸ்திரி சொன்னது சரிதான், அவர் வேலை வெண்ணையைத் தடவி பேசுவது அல்ல” - முன்னாள் செலக்டர் பேச்சு
குல்தீப் யாதவ் வெளிநாட்டின் சிறந்த இந்திய ஸ்பின்னர் என்று ரவி சாஸ்திரி கூறியது தன்னை நொறுக்கி விட்டதாக ரவி அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி 'அது அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரவி சாஸ்திரி கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கும் முன்னாள் செலக்டர் சரந்தீப் சிங்,
"அஸ்வின் தவறாக புரிந்து கொண்டார். நானும் அப்போது இருந்தேன்.
குல்தீப் யாதவ் பவுலிங் ஸ்டைல் வித்தியாசமானது எனவே வெளிநாடுகளில் அவர் நம்பர் 1 ஸ்பின்னர் என்றுதான் சொன்னார் ரவி சாஸ்திரி.
ஆம் சாஸ்திரி சொன்னது சரிதான், அவர் வேலை வெண்ணைத் தடவி பேசுவது அல்ல.
அஸ்வின் கிரேட் பவுலர், தென் ஆப்பிரிக்காவில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார்.
அவர் கேம் சேஞ்சர். இது இவருடைய கடைசி தொடராக இருக்காது, நிச்சயம் அவர் இன்னும் நமக்கு விக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுப்பார்" என்றார்.