செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம்; ரூ.22 லட்சம் பணம் பறிமுதல் - அமலாக்கத் துறை நடவடிக்கை!

V. Senthil Balaji Tamil nadu DMK Enforcement Directorate
By Jiyath Aug 05, 2023 10:34 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர் அமலாக்கத் துறையினர். 

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காவிரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம்; ரூ.22 லட்சம் பணம் பறிமுதல் - அமலாக்கத் துறை நடவடிக்கை! | Ex Minister Senthil Balaji Money Seized By Ed

உடல் நிலைய சரியானதை அடுத்து தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை நடவடிக்கை

இந்நிலையில் கடந்த 03/08/2022 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்களை முடக்கியது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம்; ரூ.22 லட்சம் பணம் பறிமுதல் - அமலாக்கத் துறை நடவடிக்கை! | Ex Minister Senthil Balaji Money Seized By Ed

மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ. 22 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை அமலாக்கத்துறை ட்விட்டேர் கணக்கில் வெளியிட்டுள்ளனர்.