‘’ ஸ்டாலின் காங்கிரஸ் பாஜக என்ற இரட்டை குதிரையில் பயணம் செய்கின்றார் ‘’ : ஜெயக்குமார் விமர்சனம்

admk jayakumar exminister
By Irumporai Apr 03, 2022 07:42 AM GMT
Report

இனி முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்ததாக மன்னிப்பு கேட்கும் சுற்றுப்பயணத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னை ராயபுரம் என்.1 காவல் நிலையத்தில் ஆறாவது நாளாக கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்.

காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திடுவது பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவது போல இருப்பாதாக கூறிய ஜெயக்குமார். ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கு வந்து கையெழுத்திடுவது சந்தோஷமாக உள்ளதாக கூறினார்.

மேலும், அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்றும் அடுத்து வரும் தேர்தலில் திமுகவை விட 10% அதிக வாக்குகளை அதிமுக நிச்சயம் பெற்றி வெற்றி பெறும் என கூறிய ஜெயக்குமார். முதலமைச்சர் ஸ்டாலின், துபாய், டெல்லி என சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டார். எனவே அடுத்ததாக மன்னிப்பு கேட்கும் சுற்றுப்பயணத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

திமுகவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ராகுல்காந்தி ஏன் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ? தற்போது பிஜேபி உடன் திமுகவினர் இணக்கமாக சென்று வருவதாகவும், திமுக இரட்டை குதிரையில் பயணம் செய்வதால் ராகுல்காந்தி, உணர்ந்ததால் அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்று தெரிவித்தார்.