முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேத்தி துாக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
பெங்களூருவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேத்தி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாஜகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா (வயது 30 ) பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரின் கணவர் மீரஜும் மருத்துவர். இவர்கள் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டு வேலை செய்யும் பெண் சென்றுள்ளார்.அப்போது அவர் கதவை நீண்ட நேரம் தட்டிக்கொண்டு இருந்துள்ளார்.ஆனால் கதவு திறக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் மீரஜிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த மீரஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது சவுந்தர்யா மின் விசிறியில் துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா தியானேந்திரா,தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும்,கர்ப்பத்திற்கு பிறது சவுந்தர்யா மன அழுத்தத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.தனது பேத்தி மரணத்தால் எடியூரப்பா மிகவும் வருத்தத்தில் இருப்பதாக கூறினார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    