சர்வேயரை செருப்பால் தாக்கிய முன்னாள் அதிமுக கவுன்சிலர் - பரபரப்பு சம்பவம்!
முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஒருவர் சர்வேயரை செருப்பால் தாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில பிரச்சனை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி என்பவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் நில பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தை அளவீடு செய்வதற்காக நில அளவையர் மகேஸ்வரன் என்பர் வந்துள்ளார். அப்போது சீதாபதிக்கும் மகேஸ்வரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
செருப்பால் தாக்குதல்
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நில அளவையர் முதலில் செருப்பை கழற்றி சீதாபதியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சீதாபதி தனது செருப்பை கழற்றி நில அளவையரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
