ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஈவேரா திருமகன் உயிரிழந்தை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து பிரதான கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேலையில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது.
சஞ்சய் போட்டி?
இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது இளைய மகன் சஞ்சய் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.