கூட்டணியில் சலசலப்பா..?விஜிலென்ஸ் வரும் - வைரலாகும் அண்ணாமலை பேச்சு...!!
அனைவருக்கும் பாதுகாப்பு அவசரம் என்றும், தமிழகத்தில் தனித்து நின்று வென்று விடுவோம் என கூறும் அளவிற்கு எந்த கட்சியும் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முறிந்த கூட்டணி
அண்மையில் அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. பெரியார், அண்ணா குறித்து அண்ணாமலையின் விமர்சனமே இதற்கு காரணமாக கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
சிவி சண்முகம் விமர்சித்த நிலையில் சில தினங்கள் முன்பு அது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியில் சலசலப்பு எதுவும் இல்லை என குறிப்பிட்டு, கூட்டணியின் தேவை அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
தனிமரம் தோப்பாகாது
இங்கேயும் டிவிஏசி இருக்கிறது என குறிப்பிட்ட அண்ணாமலை, இங்கேயும் விஜிலென்ஸ் துறை இருக்கிறது என்றும் அனைவருக்கும் இங்கே பாதுகாப்பு தேவைதானே என சுட்டிக்காட்டினார். தனி மரம் என்றும் தோப்பாகாது எனக் கூறி, கூட்டணி அனைவருக்கும் தேவைதான் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான யாரையும் மிரட்டவில்லை என விளக்கி, டிவிஏசி தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் எனக்குக் கூட்டணி வேண்டாம் என்பது என்ன பேச்சு - இது என்ன போக்கு என வினவினார். அனைவரையும் அரவணைத்தே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி, தனி மரத்தை வைத்துக் கொண்டு இருப்பேன் என்றால் புயல் வரும் போது இந்த தனிமரம் தான் காணாமல் போகும் என தெரிவித்தார்.