யூரோ கோப்பை யாருக்கு? : இங்கிலாந்து - இத்தாலி இன்று மோதல்
யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
லண்டனில் நடந்து வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
நடப்பு தொடரில் கட்டுக்கோப்புடன் ஆடிய இங்கிலாந்து, எதிரணிக்கு இதுவரை ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு எந்த கோப்பையும் கைப்பற்றியதில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 11-ல் இத்தாலியும், 8-ல் இங்கிலாந்தும், 8 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது.இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.